Saturday, September 22, 2012

கீழ்க்கட்டளையில் அம்மாவை வறுத்தெடுத்த திண்டுக்கல் லியோனி!

புகழ்பெற்ற நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் இன்றைய தினம் கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வறுத்தெடுத்தார்.

கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அருகில் உள்ள வீதியில் 22/09/2012 சனிக்கிழமை இரவு எட்டு மணியளவில் தி.மு.க அரசை ஆதரித்து உரையாற்றினார்.

வழமையாகவே தி.மு.க வின் அனுதாபியான இவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நகைச்சுவை கலந்து விமர்சித்தார்.

முக்கியமாக ஜெயலலிதா அவர்கள் சமசீர் கல்வியை நிறுத்தியமை தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

தி.மு.க வின் அரசவைக் கவிஞர் போல வரிக்குவரி கருணாநிதி புகழ் மாலை பாடினார் திண்டுக்கல் ஐ.லியோனி.





Wednesday, September 19, 2012

கீழ்க்கட்டளையில் பிரமாண்ட விநாயகர் சிலை!

இந்து மக்களால் புனிதமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றைய தினம் சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இம்முறை சென்னையின் புறநகரான கீழ்கட்டளை சந்திக்கு அருகாமையில் வழமை போல பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

இம்முறை அருள் விநாயகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 இன்று மாலை விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதையும் அதனை ஏராளமான அடியார்கள் சூழ நின்று வழிபடுவதனையும் படங்களில் காணலாம்.






Tuesday, September 18, 2012

கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற விஜயகாந்த் கட்சிக் கூட்டம்!

விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவும், தே.மு.தி.க கட்சி ஆரம்பிக்கப்பட்டு 8 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கீழ்க்கட்டளையில் இன்று மாலை இடம்பெற்றது. .









Thursday, September 6, 2012

கீழ்க்கட்டளையில் உதயமாகிய புதிய உடற்பயிற்சி கூடம் (GYM)!

கீழ்க்கட்டளையில் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் (GYM) ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இது கீழ்க்கட்டளை பொலிஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இங்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சித் துறையில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களே இங்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்பது இதன் விசேட அம்சமாகும்.